என் மலர்
நீங்கள் தேடியது "தற்காலிக பட்டாசு கடைகள்."
- தீபாவளி பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள்.
- 30-ந் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதி நடைபெறும் தீபாவளி பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், அரசின் நிபந்தனைகளை பின்பற்றி, இணையதளம் வழியாகமாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில், விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.
விண்ணப்பத்துடன், இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் அட்டை, உரிமக் கட்டணம், 500 ரூபாயை வங்கி கருவூலத்தில் செலுத்திய சீட்டு, பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டிடம் என்றால், மனுதாரர் பெயரில் உள்ள பட்டா, வாடகை கட்டடம் என்றால் வாடகை ஒப்பந்தப்பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடம் இருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டிட திட்ட அனுமதி ஆகிய விவரங்களுடன், வருகிற 30-ந் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






