என் மலர்
நீங்கள் தேடியது "சகதியுமாக காட்சியளிக்கும் சாலை"
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை சேறும், சகதியுமாகவும், தண்ணீர் தேங்கியும் காணப்படும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் உல்லத்தி ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினமும் வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் பகுதிக்கு ஒரு சாலை உள்ளது. அந்த சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. மழை காலங்களில் சொல்லவே வேண்டாம்.
சாலை சேறும், சகதியுமாகவும், தண்ணீர் தேங்கியும் காணப்படும். இதில் அந்த பகுதி மக்கள் நடந்து செல்லவே மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக மழைகாலங்களில் இந்த சாலை மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. இந்த பாதையை சரி செய்ய கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை.
இந்த சாலையை தான் தினமும் பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு செல்லும் போது சில நேரங்களில் சிலர் வழுக்கி கீழே விழுந்து விடுவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






