என் மலர்
நீங்கள் தேடியது "உயிர்தப்பிய பச்சிளங்குழந்தை"
- மின்விசிறி திடீரென கழன்று அந்த பெண்ணின் கால் மீது விழுந்தது.
- சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பிற நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அன்று மாலையே பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அந்த பெண்ணின் படுக்கைக்கு மேலே இருந்த மின்விசிறி திடீரென கழன்று அந்த பெண்ணின் கால் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அருகே இருந்த பச்சிளங்குழந்தை தப்பியது.இதனால் அந்த சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பிற நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறிப்பிட்ட நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்பதில் தொடங்கி கழிவறைகளில் கதவுகளுக்கு தாழ்ப்பாள் கூட இல்லை என்பதுவரை புகார்களை நோயாளிகள் அடுக்கி கொண்டே செல்கின்றனர்.
குறிப்பிட்ட நேரங்களில் மருத்துவர்கள் வராததால் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற வருவோர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இந்த புகார்களுக்கு பதிலளித்துள்ள அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி விரைவில் அனைத்து குறைகளும் சரிசெய்யப்படும் என்று கூறியுள்ளார்.






