என் மலர்
நீங்கள் தேடியது "சூதாடியவர்களிடம் இருந்து"
- கோபி செட்டிபாளையம் அடுத்த கொல்லுமேட்டு காலனி பகுதியில் சிலர் சூதாடுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அவர்களிடம் இருந்து ரூ.620 பறிமுதல் செய்யப்பட்டது.
கோபி:
கோபி செட்டிபாளையம் அடுத்த கொல்லுமேட்டு காலனி பகுதியில் சிலர் சூதாடுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் 6 பேர் சூதாடி கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள்அளுக்குளி பகுதியை சேர்ந்த சூர்யா, கார்த்திக், சதீஸ், லட்சுமணன் என தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து ரூ.620 பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






