என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது"

    • டிரைவர், கண்டக்டரை கத்தியை காட்டி கொலை மிரட்டல்
    • பெண் பயணி காயம்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பணிமனையில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று குடியாத்தம் மோர்தனா கிராமத்திற்கு சென்று வருகிறது.

    நேற்று மாலையில் சுமார் 4.45 மணி அளவில் அந்த டவுன் மோர்தானா கிராமம் சென்று கொண்டிருந்தபோது சேங்குன்றம் கிராமம் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவர் சாலையின் குறுக்கே நின்று குடிபோதையில் கத்தியை காட்டி கலாட்டா செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கற்களை எடுத்து பஸ் மீது சரமாரியாக வீசினார்.

    இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது மற்றும் பக்கவாட்டில் இருந்த நான்கு கண்ணாடிகள் உடைந்தது. கண்ணாடி துண்டுகள் விழுந்து ஒரு பெண் பயணிக்கு காயம் ஏற்பட்டது.

    அப்போது டிரைவர் சவுந்தரராஜன் கண்டக்டர் சீனிவாசன் கீழே இறங்கி வந்தபோது அவர்களை அந்த பூவரசன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதை தொடர்ந்து பயணிகள் வேறு பஸ்சில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர் கண்ணாடி துண்டுபட்டு காயமடைந்த பெண் பயணி குடியாத்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    தொடர்ந்து அந்த பூவரசன் அந்த வழியாக சென்ற தனியார் பஸ்சையும் வழிமறித்து தகராறு செய்துள்ளார். அந்த வழியாக ஆந்திராவிற்கு சென்ற காரை நிறுத்தி தகராறு செய்து காரில் இருந்த நபரை கத்தியால் வெட்டியுள்ளான்.

    அவர்கள் பயந்தபடியே சென்று விட்டனர் இதனை தொடர்ந்து டவுன் பஸ் டிரைவர் சவுந்தர்ராஜன், கண்டக்டர் சீனிவாசன் ஆகியோர் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி பஸ் கண்ணாடி உடைத்து கொலை மிரட்டல் விடுத்த பூவரசன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகிறார்.

    பூவரசன் தொடர்ந்து பல்வேறு குற்ற நடவடிக்கைகள் ஈடுபட்டு வந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×