என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிசைகள் ஆக்கிரமிப்பு"

    • தொடுகாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமான் ஏரி நீர்நிலை புறம்போக்கு அரசு நிலம் உள்ளது.
    • நீர் நிலை புறம்போக்கு பகுதியில் குடிசை மற்றும் வேலிகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த தொடுகாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீமான் ஏரி நீர்நிலை புறம்போக்கு அரசு நிலம் உள்ளது. இந்த நிலம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் வெங்கத்துார் மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர் மற்றும் கிராம நிர்வாக அலுவலவர்கள் குமரன், காளிராஜன், உமா, விஜய் உட்பட வருவாய்த்து றையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது நீர் நிலை புறம்போக்கு பகுதியில் குடிசை மற்றும் வேலிகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

    ×