என் மலர்
நீங்கள் தேடியது "நட்சத்திர மகா யாகம்"
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் இஞ்சிமேடு, வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாத சுவாதி நட்சத்திரம் மகாயாகம் நடந்தது.
காலையில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, தாயார், லட்சுமி நரசிம்ம பெருமாள், சக்கரத்தாழ்வார், சீதாராமன், அனுமான், ஆகிய சாமிகளுக்கு பல்வேறு அபிஷேகம் செய்து திருமஞ்சனம் செய்து வைத்தனர்.
பின்னர் யாகசாலையில் பல்வேறு வண்ண அரிசிகள் மூலம் சுவாதி நட்சத்திர மகா கோலம் வரைந்து, பல்வேறு மூலிகைகள், நெய், நவதானியம், பழங்கள், ஆகியவை மூலம் சுவாதி நட்சத்திர மகா யாகம் நடந்தது.இதில் சுற்றுப்புற நகரங்கள், கிராமங்களில், இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இதர்க்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்க சடகோப கைங்கரிய சபா நிர்வாகி பாலாஜி, பட்டர் செய்திருந்தார்.






