என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடுகளை பிடிக்க கோரிக்கை"

    • நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    ஆற்காடு:

    ஆற்காடு நகர்மன்றக் கூட்டம் ஆற்காடு நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-

    தட்சிணாமூர்த்தி: நகர்ப்புற சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ஏ.என்.செல்வம்: தோப்புகானா பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையற்ற பொருள்களை வைத்துள்ளனர். மருத்துவமனை சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது.

    லோகேஷ்: ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. சாலைகளில் நடைபாதை இல்லை, நடைபாதை அமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.

    சுகாதார ஆய்வாளர்: கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாவை: நகரின் பல இடங்களில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டும்.

    பாஞ்சாலி: தோப்புகானா நகராட்சி வடக்கு பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    காமாட்சி: எனது வார்டில் மின் கம்பங்கள் சரியில்லை. தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை, பன்றித் தொல்லை, கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.

    பொறியாளர்: புதிய மின் கம்பங்கள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. பன்றிகளை பிடிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராஜலட்சுமி: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள புல்பூண்டு செடிகளை அகற்றவேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் கண்ணன், குணாளன் கொண்டனர்.பல்வேறு தீர்மானங்கள் முனவர்பாஷா, உள்ளிட்டோர் கலந்து கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டன.

    ×