என் மலர்
நீங்கள் தேடியது "ஏரியில் அதிகாரிகள் ஆய்வு"
- முன்னேற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை
- தூய்மைப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது
குடியாத்தம்:
குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஏராளமான விநாயகர் சிலைகள் கரைப்பது வழக்கம்.
இதனை முன்னிட்டு அங்கு கரைப்பதற்கான முன்னேற்பாடுகளை குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் காவல்துறையினர், வருவாய் துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் எஸ். தனஞ்செயன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் விஜயகுமார், நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், தீயணைப்பு நிலையை அலுவலர் லோகநாதன், நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
அப்போது நெல்லூர் பேட்டை ஏரியில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பகுதியில் பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்வது சிலைகள் கரைக்கும் பகுதியில் ஆழப்படுத்துவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் சிலைகள் கரைக்கும் இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.






