என் மலர்
நீங்கள் தேடியது "மனு வாங்கும் நிகழ்ச்சி"
- பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்கும் நிகழ்ச்சி நடந்தது
- எம்.எல்.ஏ.க்கள் ெபற்றுக்கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர், திருமானூர், தாபழுர், ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ வக்கீல் கு.சின்னப்பாவும், ஜெங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியங்களில் கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ. க.சொ.க. கண்ணனும் ெபற்றுக் கொண்டனர்.
தற்பொழுது தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி, எதிர் கட்சி என எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும் முதல்வர் எழுதிய கடிதத்தில், தங்களது தொகுதியில் நீண்ட நாள்களாக தீர்க்கப்படாமல் உள்ள முக்கிய 10 கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனால் தொகுதியின் முக்கிய பிரச்சனைகள் தமிழக அரசால் தீர்க்கப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கி, பயன்பெற வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்து கொண்டனர்.
இதேபோல் ஆண்டிமடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், தா.பழூரில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றன.






