என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் நீரில் மூழ்கி பலி"

    • ஜெயங்கொண்டத்தில் கோவில் வழிபாட்டுக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
    • சூரக்குழி ரெட்டப் பள்ளம் ஏரியில் மாயமான அஜய் பிணமாக கிடப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள அண்ணன்காரன் குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில நேற்று முன்தினம் சூரக்குழி ரெட்டப்பள்ளம் அருகிலுள்ள தனது உறவினரின் குலதெய்வ கோவில் விழாவில் பங்கேற்பதற்காக வேல்முருகன் தனது குடும்பத்துடன் சென்றிருந்தார்.

    அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த வேல்முருகனின் மூத்த மகன் அஜய் திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடினர். இதற்கிடையே சூரக்குழி ரெட்டப் பள்ளம் ஏரியில் மாயமான அஜய் பிணமாக கிடப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆண்டிமடம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடகை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. திருவிழாவுக்கு சென்ற இடத்தில் குழந்தை இறந்தது அங்கு வந்திருந்த உறவினர்கள் மக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×