என் மலர்
நீங்கள் தேடியது "கீழ்வெண்பாக்கம் ஊராட்சியில்15வது நிதிக்குழு மான்யம்"
- பூமி பூஜை நடந்தது
- அதிகாரிகள் பங்கேற்பு
நெமிலி, ஆக.23-
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம் ஊராட்சியில்15வது நிதிக்குழு மான்யம் மற்றும் ஆதிதிராவிடர் குக்கிராமங்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் சிறுபாலம் அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
கீழ்வெண்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி முருகவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வேதமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர் சுகுமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிலம்பரசன், ஊராட்சி எழுத்தர் ராஜி, குலோத்துங்கன், மதிவாணன், இளையராஜா, கண்ணன், அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.






