என் மலர்
நீங்கள் தேடியது "பெட்ரோல் கேனுடன் வந்த முதியவர்"
- வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி
- போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்ட கலெக்டர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதனையொட்டி கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் பலத்த சோதனைக்கு பிறகு பொதுமக்களை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அனுமதித்தனர்.
அரியூர் அருகே உள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் (வயது 60) என்பவர் மஞ்சள் பையுடன் வந்திருந்தார். அதை போலீசார் சோதனை யிட்டனர். அதில் அரை லிட்டர் பெட்ரோல் கேன் இருந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் கலெக்டரிடம் சென்று மனு அளித்தார். அப்போது பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் இதுவரை பட்டா கிடைக்கவில்லை. அதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்ததாக கூறினார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அர்ஜுனன் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவரை சத்துவாச்சாரி போலீசார் அழைத்துச் சென்றனர்.
பொன்னையைச் சேர்ந்த ஏகாம்பரம் (60) என்பவர் மனு கொடுக்க வந்தார். அவர் கலெக்டர் முன்பு திடீரென அமர்ந்து விட்டார். அவரிடம் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள சுவரை அகற்றிவிட்டு புதிதாக வீடு கட்ட உள்ளேன்.
அந்த சுவரை இடிக்க விடாமல் அருகில் உள்ளவர்கள் தாக்க வருகிறார்கள். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனது இடத்தில் உள்ள சுவரை அகற்றிவிட்டு புதிய வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என கூறினார். அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பள்ளிகொண்டா பேரூராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் தீபா கார்த்திகேயன் என்பவர் அளித்த மனுவில் பள்ளிகொண்டா வேப்பங்கால் பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட இடம் இல்லை. அந்த பகுதியில் சுகாதார நிலையம் அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.






