என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமையான கிராமங்கள்"

    • நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் நடவடிக்கை
    • கலெக்டர் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்ட பசு மையான கிராமங்களை உருவாக்கவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ் கர பாண்டியன் வலியு றுத்தினார்.

    ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட்சிதுறையின் சார் பில் கிராம ஊராட்சிகளை தூய்மைப்படுத்தும் விதமாக நம்ம ஊரு சூப்பரு என்ற திட் டத்தின் ஆலோசனை கூட் டம் நடந்தது. கெலெக்டர் பாஸ் கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:

    ராணிப்பேட்டைமாவட்ட ஊரகப் பகுதிகளில் பாதுகாப் பான சுகாதாரம் மற்றும் தூய் மையான சுகாதாரத்தை ஏற்ப டுத்தும்பொருட்டு அனைத்து ஊரகப்பகுதிகளிலும் வருகிற 2-ந் தேதி வரை நம்ம ஊரு சூப்பரு என்ற தலைப்பில் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பிரசா ரம் நடத்திட வேண்டும்.

    பொது நிறுவனங்கள் மற் றும் பொது இடங்களில் ஒட் டுமொத்த தூய்மை பணி களை மேற்கொள்ளுதல், பள் ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து விழிப் புணர்வு வழங்குதல், சுய உத விக் குழு உறுப்பினர்கள் மூலம் வீடுகள் தோறும் விழிப் புணர்வு ஏற்படுத்துதல், ஒரு முறை பயன்படுத்தப்படும். பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல், மீண்டும் மஞ் சப்பை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட வைகளை பிரசாரத்தில் தெரி விக்க வேண்டும்.

    இந்த பிரசாரத்தை சிறப் பான முறையில் செயல்படுத் தி மாவட்ட அளவில் ணை இயக்குனராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்நியமனம் செய்யப்பட்டுள் ளார். ஊரக வளர்ச்சித்துறை யுடன் ஒருங்கிணைந்து சிறப்பு பிரசாரத்தினை திறம்பட செயல்படுத்திட திட்ட இயக் குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வருவாய் அலுவ லர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர், துணை இயக்குனர், மாவட்ட சமூக பாதுகாப்பு நல அலுவ லர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், 5 மாவட்ட வன அலுவலர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், சுற்றுலாத்துறை உதவி இயக்குனர், பேரூராட் சிகள் உதவி இயக்குனர் மற் றும் பிற அலுவலர்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ள னர்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார் மற் றும் துறை சார்ந்த அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

    ×