என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா வியாபாரி மீது குண்டாஸ் பாய்ந்தது"

    • இவர் மீது வேப்பனப்பள்ளி போலீசில் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அவரை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் என்கின்ற கமலேசன் (வயது43). இவர் மீது வேப்பனப்பள்ளி போலீசில் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் வேப்பனப்பள்ளி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் பல்வேறு வழக்குகள் மற்றும் கஞ்சா விற்பனை வழக்கில் தொடர்புடைய இவரை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் பரிந்துரையின் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அவரை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து பசவராஜ் நின்ற கமலேசன் என்பவரை வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் குண்டாஸ் வழக்குப்பதிவு செய்து சிறையில் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கஞ்சா வியபாரி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளதால் தீர்த்தம் சுற்றுவட்டார கிராம கஞ்சா வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர்.

    ×