என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகளை வாங்கிக்கொண்டு"

    • நகைகளை வாங்கிக்கொண்டு மகளை கணவருடன் பெற்றோர் அனுப்பிவைத்தனர்
    • வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையாறு கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் என்பவரது மகன் அறிவழகன் (வயது 23). இவர் சென்னை பல்லாவரம் பகுதியில் தனியார் பர்னர் தயாரிப்பு கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார்.

    இதற்காக அவர் கோவிலம்பாக்கம் காந்திநகர் ராஜேஸ்வரி 4-வது தெருவில் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த வேலு மகள் மகேஸ்வரி (18) என்பவருக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் இவர்களது காதல் விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்ததால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கண்டித்துள்ளனர். இதற்கிடையே சென்னை கோவிலம்பாக்கத்தில் இருந்த மகேஸ்வரியை அறிவழகன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையாறு கிராமத்திற்கு அழைத்து வந்து உடையார்பாளையம் வேலப்ப செட்டி ஏரி அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து கடந்த 18-ந்தேதி திருமணம் செய்து கொண்டார்.

    இருந்தபோதிலும் பெண் வீட்டார் பிரச்சினை செய்வார்கள், அவர்களால் ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்து காதல் ஜோடி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி பெண்ணில் பெற்றோர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து இருவரையும் அழைத்து விசாரித்துள்ளனர்.

    அப்போது நாங்கள் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும் காதல் ஜோடி தெரிவித்துள்ளது. பெண்ணின் பெற்றோர்கள் திருமணத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் இனிமேல் எங்களுக்கும் மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தனர்.

    இதையடுத்து மகள் அணிந்திருந்த கம்மல், தோடு, கொலுசு உள்ளிட்டவர்களை பெற்றுக்கொண்டு ஊர் திரும்பிவிட்டனர். தொடர்ந்து புதுமண தம்பதியினருக்கு போலீசார் அறிவுரைகள் வழங்கி அறிவழகனின் பெற்றோர்களுடன் இடையாறு கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    ×