என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 கிலோ புகையிலை"

    • “மளிகைக்கடையில் 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை தாலுகா, மலம்பட்டி பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த மருதன் (வயது 48) என்பவரது மளிகை கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் உள்ளிட்ட 2 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதனை கைது செய்தனர்.

    ×