என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவில் புழு?"

    • வாடிக்கையாளர் குற்றச்சாட்டு
    • உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் எதிரில் ஓட்டல் ஒன்று உள்ளது.

    நேற்று முன்னதினம் மதியம் ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஓட்டலில் சாப்பிட்டார். அப்போது அசைவ உணவில் காடை கரியில் புழு உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து ஒட்டல் ஊழியர்களிடம் கேட்டதற்கு இருதரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவம் குறித்து அவர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போன் மூலம் புகார் அளித்தார். இந்த சம்பவம் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் கூறியிருப்பதாவது:-

    போன் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த புகாரில் சம்மந்தபட்ட அசைவ ஓட்டலில் ஆய்வ மேற்கொண்டு காடை கறி மாதிரிகளை ஆய்வு அனுப்பியுள்ளதாகவும் ஆய்வறிக்கை வந்த பின்னர் நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும் என தெரிவித்தனர்.

    ×