என் மலர்
நீங்கள் தேடியது "வருவாய் துறையினர் சோதனை"
14 மூட்டை சிக்கியது
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்பேரில் நேற்று வட்ட வழங்கல் அலுவலர் சந்தியா, வருவாய் ஆய்வாளர் மாதவன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்காடு பைபாஸ் சாலை ஓரத்தில் 14 மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலாஜா நுகர் பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.






