என் மலர்
நீங்கள் தேடியது "செலவுக்கு பணம் இல்லாததால்"
- ஒருவர் தப்பி ஓட்டம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த செங்கல் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராணி. இவரது வீட்டில் கட்டி வைத்திருந்த 4 ஆடுகளை திருடி சென்றனர்.இதுகுறித்து சோளிங்கர் போலீசில் புகார் செய்தார்.
ரெண்டாடி கிராமம் பச்சையம்மன் கோயில் அருகே சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிள் வேகமாக தடுத்து நிறுத்தி விசாரித்த போது பின்னால் உட்கார்ந்து இருந்த வாலிபர் போலீசாரை பார்த்தவுடன் ஓடிவிட்டார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை விசாரணை செய்ததில் அவர் சித்தூர் மாவட்டம் திமிதிபாளையம் ஊரை சேர்ந்த பவன் (வயது 22) என்பது தெரிந்தது. மேலும் விசாரணை செய்த போது அவர் தப்பி ஓடிய வினோத் என்பவர் குப்புக்கல் மேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும் அவர் ஊர் திருவிழாவுக்கு ஜூலை 23ஆம் தேதி நண்பர் என்ற முறையில் வந்த போது செலவுக்கு பணம் இல்லாததால் குப்புக்கல்மேடு அருகே உள்ள செங்கல்நத்தம் கிராமத்தில் ராணி வீட்டில் இருந்த நாலு வெள்ளாடுகளை திருடி சென்றதும் அதை அவர் ஊரில் பதித்து வைத்திருப்பதையும் தெரிவித்தார்.
அது அறிந்த போலீசார் அந்த நாலு வெள்ளாடுகளையும் பறிமுதல் செய்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து பவனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வினோத்தை தேடி வருகின்றனர்.






