என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2ம் ஆண்டு"

    • அன்னை சித்தர் 2ம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெற்றது
    • அறக்க–ட்டளை நிர்வாகஅறங்கா–வலர் தலைமை வகித்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே–யுள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் இரண்டாமாண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு, அறக்க–ட்டளை நிர்வாகஅறங்கா–வலர் மாதாஜி ரோகிணி ராஜ்குமார் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் தவயோகி சுந்தரமாகலிங்க சுவாமிகள், தவத்திருதவ–யோகி தவசிநாதன் சுவாமி–கள் முன்னிலை வகித்தனர். சன்மார்க்க அன்பர்களால் அகவல் பாராயணமும், சிவனடியார்களால் திருமுறை பாராயணமும் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, கோபூஜை, அஸ்வ பூஜை, 210 சித்தர்கள் யாக பூஜை நடத்தப்பட்டு, 1,000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் சாதுக்களுக்கு அன்னதானமும், வஸ்திர தானமும் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, அறக்க–ட்டளை சார்பில்மாவட்ட அரசு தலைமை மருத்துவ–மனைக்கு இணைஇயக்குநர் அசோகனிடம், சிவகாசி தொழிலதிபர் அதிபன் போஸ், சிங்கப்பூர் மெய்ய–ன்பர் பாபாஜி, சிங்கப்பூர் தொழிலதிபர் கண்ணப்ப செட்டியார், ஓய்வுபெற்ற இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவகுமார், மருத்துவர் ராஜாசிதம்பரம், சன்மார்க்க சங்க மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன், சிவசேனா கட்சி மாநில செயல் தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலையில் உயிர்காக்கும் கருவி வழ–ங்கப்பட்டது.

    விழாவையொட்டி, மலையூர் சதாசிவம், திருக்கோ–விலூர் ஜீவஸ்ரீனிவாசன் ஆகியோரின் திருவருள்பா கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், தொழிலதிபர் பி.டி. ராஜன், தஞ்சை சண்முகம், திரைப்பட இயக்குநர் திருமலை, திரைப்பட இணை இயக்குநர் ஜெயதீபன், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத் துணைத் தலைவர் சுவாமி ராமானந்தா, பெங்களூரைச் சேர்ந்த பாலமுரளி, சென்னையைச் சேர்ந்த பள்ளி தாளாளர் கோமதி அம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் கோயில் நிர்வாகி மாதாஜி ராதா சின்னசாமி, சன்மார்க்க மெய்யன்பர் கிஷோர்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×