என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "600 பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊர்வலம்"

    • பம்பை மேளதாளங்கள் முழங்க திருவிழா கொண்டாடப்பட்டது.
    • பக்தர்கள் கரகம் எடுத்தும், அம்மன் வேடமிட்டும் ஊர்வலமாக வந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி அருகே உள்ள கடகத்தூர் பகுதி சக்தி மாரியம்மன் திருவிழா கடந்த திங்கட்கிழமை பட்டாளம்மனுக்கு பொங்கல் வைத்து கங்கை பூஜை செய்த பின்னர் சாமி திருவீதி உலாவுடன் தொடங்கியது.

    9-ம் தேதி 2-ம் நாள் திருவிழாவாக கூழ் ஊற்றுதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து நேற்று பட்டாளம்மனுக்கு தேர் வீதி உலாவில், 600-பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    இந்த ஊர்வலத்தின் போது, மயிலாட்டம், கரகாட்டம், கட்டக்கால், பொய்க்கால் குதிரை, பம்பை மேளதாளங்கள் முழங்க திருவிழா கொண்டாடப்பட்டது.

    பக்தர்கள் கரகம் எடுத்தும், அம்மன் வேடமிட்டும் ஊர்வலமாக வந்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    ×