என் மலர்
நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிச்சாமி வருகை"
- எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி,
அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க, பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:-
அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை (ஆக. 9) சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னை செல்கிறார்.
காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
எனவே இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளைக்கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.






