என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகளை அகற்ற உத்தரவு"

    • நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
    • முதற்கட்டமாக மின்சார இணைப்பு துண்டிக்கப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன.அங்குள்ள மலைப்பகுதிகளில் வீடுகள் கட்டியுள்ளனர்.

    மழைக்காலத்தின் போது மலையிலிருந்து பாறைகள் உண்டு விபத்துகள் ஏற்படுகிறது.

    இதனை தடுக்கவும் ஆற்காடு சாலையை ஆக்கிரமித்து உள்ள கட்டிடங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் காகிதப்பட்டறை சீனிவாசா தியேட்டர் எதிர்புறம் 22 கடைகள் மற்றும் 8 வீடுகளுடன் கூடிய கடைகள் 2 தனி வீடுகள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.

    அவர்களை அந்த இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலை துறையினர் கூறினர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் தாசில்தார் செந்தில் காகிதப்பட்டறை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதன் உரிமையாளர்களிடம் உடனே காலி செய்யுமாறு உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்:-

    ஆற்காடு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 22 கடைகள் வீடுகளுடன் கூடிய 8 கடைகள் மற்றும் 2 தனி வீடு கட்டிடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக அதன் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது.இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மூலம் இந்த கட்டிடங்கள் அகற்றப்படும் என்றார்.

    ×