என் மலர்
நீங்கள் தேடியது "கடை திறப்பு விழா"
- நிர்மலா சீதாராமன் மீது அமைச்சர் துரைமுருகன் பாய்ச்சல்
- புதிய ரேசன் கடை திறப்பு விழா நடந்தது
வேலூர்:
காட்பாடி, பள்ளிக்குப்பம், பெரியபுதூர், ஆகிய இடங்களில் புதிய பஸ் நிறுத்த கட்டிடம், ரேசன் கடை ஆகியவற்றை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் நாங்கள் சொல்வதை தி.மு.க. எம்.பிக்கள் கேட்க மறுக்கிறார்கள் என மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்., அவர்கள் சொல்வதை கேட்க நாங்கள் அங்கு போகவில்லை, நாங்கள் (எம்.பிக்கள்) சொல்வதை கேட்க தான் அவர்கள் மந்திரிகளாக உள்ளனர்.
மேலும் காவேரி - குண்டாறு இணைப்பு குறித்து தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தில் இடம்பெறவில்லை. இருந்த போதும் மாயனூர் முதல் புதுக்கோட்டை வரை கால்வாய் வெட்டி வருகிறோம்.
முல்லை பெரியாரில் 137 அடிக்கு நீர் இருந்த போதிலும் அளவுக்கு அதிகமாக வரத்து உள்ளதால் அதை கேரளாவுக்கு திறந்துவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம். எல். ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






