என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் ஆர்.காந்தி திடீர் ஆய்வு"
- பிஞ்சி சுற்றுலா பணியை சிறப்பாக முடிக்க உத்தரவு
- கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று நகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மேலும் புதிய திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறியதாவது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்கும் கட்டுமான பணிகள் எந்த இடத்திலும் இல்லாத வ ண்ணம் ராணிப்பேட்டையில் சிறப்புடன் நடக்க வேண்டும். ராணிப்பேட்டை பிஞ்சி சுற்றுலா பணியானது பெரிய அளவிலான சிறப்பு திட்டமாகும்.
இந்த பணியை தரமான நிறுவனத்திடம் கொடுத்து சிறப்புடன் செய்யப்பட வேண்டும். திட்டப் பணிகள் தேவைகள் குறித்த திட்ட ஆவணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி கவுன்சிலர்கள் வார்டுகளில் பல்வேறு பணிகள் சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தனர்.
எல்லா வார்டுகளிலும் கவுன்சிலர்கள் பணிகள் அனைத்தும் முடித்து தரப்படும் என்றார்.இதில் ராணிப்பேட்டை நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகர மன்றத் துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா நகராட்சி பொறியாளர் ருத்ரகோட்டி நகர செயலாளர் பி.பூங்காவனம் மாவட்ட பிரதிநிதி எஸ்.கிருஷ்ணன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்,மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்துல்லா மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் குமார்,முத்தழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






