என் மலர்
நீங்கள் தேடியது "ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவு விநியோகம்"
- விவசாய நிலங்களில் வேலை செய்வோர் அப்படியே வந்து ஓட்டல் கடைகளில் பணிபுரிகின்றனர்.
- சுகாதாரமற்ற நிலையில் உணவுகளை தயார் செய்தும், சப்ளை செய்தும்வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் அடுத்த டேம் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
காவேரிப்பட்டணம் அடுத்த டேம் ரோடு, திம்மாபுரம் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலையொட்டி ஏராளமான ஓட்டல் கடைகள் உள்ளன.
இங்கு ஓட்டல் கடைகள் இருப்பதால் தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள், கார்கள், டூரிஸ்ட் வேன்கள் நின்று அதன் டிரைவர்கள் மற்றும் அதில் வரும் பயணிகள் அங்கு உள்ள கால்வாய்களில் குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் இங்கு ஓட்டல் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஓட்டல் கடைகளில் கூட்டம் வரும்போது இந்த ஓட்டல் கடையை ஒட்டி விவசாய நிலங்களில் வேலை செய்வோர் அப்படியே வந்து ஓட்டல் கடைகளில் பணிபுரிகின்றனர்.
அப்படி வந்து பணிபுரியும் போது சுகாதாரமற்ற நிலையில் உணவுகளை தயார் செய்தும், சப்ளை செய்தும்வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள் இந்த ஓட்டல் கடைகளில் எண்ணெயில் பொறித்தும், மீன் குழம்பு ,மீன் வருவல் செய்தும் விற்பனை செய்து வருகின்றனர்.
அப்படி விற்பனை செய்யும் மீன்கள் வியாபாரம் ஆகாமல் நின்று விட்டால் அதை அப்படியே எடுத்து அடுத்த நாட்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் பலமுறை ஓட்டல் கடைக்காரர்களுக்கும் லாரி டிரைவர்களுக்கும் சண்டை நடப்பது வாடிக்கையாக உள்ளது.
இது குறித்து லாரி ஓட்டுநர்கள் கூறும் போது, நாங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சரக்குகளை லாரியில் ஏற்றி சென்று வருகின்றோம். அப்படி வரும்போது கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் கால்வாயில் குளித்துவிட்டு இங்கு ஓட்டல் கடைகள் இருப்பதால் லாரிகளை நிறுத்திவிட்டு சாப்பிடுகின்றோம்.
அதற்கு முறையாக பணமும் வழங்குகிறோம். ஆனால் இங்கு உள்ள ஓட்டல்களில் ஒரு இடத்தில் கூட நல்ல தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் வழங்குவதில்லை. சில நேரங்களில் கெட்டுப்போன மீன்களை எங்களுக்கு வழங்கி விடுகிறார்கள்.
அதை சாப்பிட்டு விட்டு வண்டியில் செல்லும்போது எங்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இக்கடைகளில் முறையாக ஆய்வு செய்வது கிடையாது.
எனவே சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பது லாரி டிரைவர்களின் கோரிக்கையாக உள்ளது.






