என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15 பேர் மீது வழக்கு"

    • கடத்திச் செல்ல முற்பட்டவர்களை தடுத்து நிறுத்தி கேட்டபோது மின்சார பொருட்களை அங்கே போட்டுவிட்டு தப்பித்து ஓடி விட்டனர்.
    • இது சம்பந்தமாக செந்தில்குமார், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த மரிக்கம்பள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் மின் கோபுர அயன் போல்ட் மின்சாதன பொருட்களை வடக்கம்பட்டி - ராயக்கோட்டை சாலையில் மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரத் துறையினர் போட்டு வைத்துள்ளனர்.

    இதனை வில்லாரம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அன்பரசன், பாயூர் பகுதியைச் சேர்ந்த மாது உள்ளிட்ட 15 பேர் கொண்ட கும்பல் நேற்று அந்த வழியாக வந்தபோது டிராக்டரில் மின்சார துறைக்கு சம்பந்தப்பட்ட அயன் போல்டுகளை ஏற்றிக்கொண்டு தப்பித்து செல்ல முயன்றனர்.

    அப்போது மின்சாரத்துறையில் பணிபுரியும் செந்தில்குமார், கடத்திச் செல்ல முற்பட்டவர்களை தடுத்து நிறுத்தி கேட்டபோது மின்சார பொருட்களை அங்கே போட்டுவிட்டு தப்பித்து ஓடி விட்டனர்.

    இது சம்பந்தமாக செந்தில்குமார், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் 15 பேரில் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

    ×