என் மலர்
நீங்கள் தேடியது "ஆடிப்பெருக்கு கோலாகலம்"
- கொள்ளிட ஆற்றில் ஆடிப்பெருக்கு கோலாகலமாக நடைபெற்றது
- புதுமண தம்பதிகள் குவிந்தனர்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிட ஆற்றில் ஆடி18 முன்னிட்டு புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பலர் ஆற்றில் நீராடி தாலி பெருக்கி கட்டி தோச பரிகாரம் செய்து சாமி கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மன்னர்கள் காலம் தொட்டே காவிரிக்கரையோர மாவட்டங்களில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று வித நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தென்மேற்குப் பருவமழை ஆனி மாதம் துவங்கியதும், குடகு மழையில் பெருக்கெடுக்கும் காவிரி வெள்ளம், ஆனி கடைசியில் கொங்கு, சோழ மண்டலங்களைத் தொடும். சித்திரை, வைகாசி வெயிலில் காய்ந்து கிடந்த நிலங்களும், நீர்நிலைகளும் ஆடியில் வரும் புதுதண்ணீரால் நிரம்பும்.
ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் தங்கள் நெல்சாகுபடியைத் துவங்குவார்கள். நெல் விதைப்புக்காக தண்ணீரைக் கொண்டு வரும் காவிரியை வணங்கி வரவேற்பதே ஆடிப்பெருக்கு' விழா.
திருமானூர் கொள்ளிட ஆற்றங்கரையில் நீர் பெருக்கெடுத்து வருவதால் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் போலீஸ் காவலர்கள் துணையோடு புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கொள்ளிட ஆற்றில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு ஆற்றில் குளிக்க எச்சரிக்கை விடுத்து திருமானூர் காவல் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






