என் மலர்
நீங்கள் தேடியது "கைபந்து போட்டி"
- கைபந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை கலெக்டர் பாராட்டினார்
- வெற்றி கோப்பையுடன் கலெக்டரை சந்தித்தனர்
பெரம்பலூர்:
தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான 19-வது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹேண்ட்பால் போட்டி சேலம் மாவட்டம் மேச்சேரியில் கடந்த 30, 31-ந்தேதிகளில் நடந்தது.
இதில் பெண்களுக்கு நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் மாவட்ட பள்ளி மாணவிகள் விளையாட்டு விடுதி ஹேண்ட்பால் அணியினர் கலந்து கொண்டு முதல் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணியையும், கால் இறுதி போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட அணியையும், அரை இறுதிப்போட்டியில் கோவை மாவட்ட அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.
சேலம் மாவட்ட அணியுடன் நடந்த இறுதிப்போட்டியில் பெரம்பலூர் மாவட்ட பள்ளி மாணவிகள் விளையாட்டு விடுதி அணியினர் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். அவர்கள் வெற்றி கோப்பையுடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வீராங்கனைகளை கலெக்டர் பாராட்டினார். அப்போது பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், ஹேண்ட்பால் பயிற்றுனர் வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.






