என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகளுக்கு தடுப்பூசி"

    • ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 21,000 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
    • டெட்டனஸ் எனப்படும் தசை இறுக்க நோய் பாதிக்காமல் இருக்க சுமார் 15,533 குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமி ஒருவர் நோய் பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்தது சுகாதார துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இதையடுத்து குழந்தைகளை நோய் தாக்காத வண்ணம் தடுப்பூசிகளை போட முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 21,000 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    டிப்தீரியா எனப்படும் தொண்டை அலர்ஜி நோய் பரவாமல் தடுக்க 6,525 குழந்தைகளுக்கும், டெட்டனஸ் எனப்படும் தசை இறுக்க நோய் பாதிக்காமல் இருக்க சுமார் 15,533 குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    இது குறித்து சுகாதார துறை துணை இயக்குனர் கோவிந்தன் கூறுகையில் கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் குழந்தைகளுக்கு நோய் தொற்றுகள் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் 21,000 குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார்.

    ×