என் மலர்
நீங்கள் தேடியது "கருவேல புதர்களை"
- அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
- பொதுமக்கள் பாராட்டு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிறுவளையம் கிராமத்தில் இன்று காலை சிறப்பு மனுநீதி நாள் முகாம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த மனுநீதி முகாமில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் குறைகளை மனுவாக மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தனர்.
பின்னர் மனுநீதி நாளை முடித்துவிட்டு வெளியே வந்த கலெக்டர் அருகே இருந்த அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த போது கிராமத்தில் உள்ள ஏராளமான கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக வந்து அங்கன்வாடி மையத்தை சுற்றி கருவேலம் மரம் இருப்பதை அவரிடம் கோரிக்கையாக வைத்தனர்.
பின்னர் அந்த இடத்திற்கு சென்ற ஆட்சியர் அங்கிருந்த கருவேல மரங்களை முழுவதும் தானே முன்வந்து கத்தியால் கருவேல மரங்களை வெட்டி உள்ளார் மேலும் அங்குள்ள ஊராட்சி அதிகாரிகளிடம் பேசிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இது போன்ற ஒரு அரசு அங்கன்வாடி மையம் அருகே புதார் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள் இருக்கக் கூடாது என்றும் இதை தினமும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்
பிறகு கிராம மக்கள் கோரிக்கை வைத்த அடுத்த நொடியே கலெக்டர் இந்த செயலால் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் கலெக்டரை வெகுவாக பாராட்டினார்.






