என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலாபிஷேகம் செய்த பக்தர்கள்"

    • திண்டுக்கல் பாரதிபுரத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பாரதிபுரத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

    திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சாய்முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×