என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்வாய் அமைக்க பூமிபூஜை"

    • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெரு மாள் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    பர்கூர் ஒன்றியம் பாலிநாயனப்பள்ளி ஊராட்சி பாலிநாய னப்பள்ளி கிராமத்தில் 15-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெருமாள் வார்டு மேம்பாட்டு நிதி மூலம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெரு மாள் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.பி. பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயபாலன், ஒன்றிய குழு உறுப்பினர் முரளி, ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினர் வெற்றிச்செல்வன், முன்னாள் ஊராட்சி செயலாளர் வேணு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமன், வெங்கடசாமி, ஊர் பிரமுகர்கள் தெய்வமணி, கங்காதரன், சண்முகம், ஒப்பந்ததாரர் சர்வேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×