என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்"

    • கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சின்ன ஏரியை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
    • நீர்நிலைகளை சுத்தப்ப டுத்தி, 300 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி யில் நீர்நிலைகளை தூய்மையாக வைத்துக் கொள்வது மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சின்ன ஏரி, படேதலாவ் ஏரியை சுற்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இது குறித்து கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறுகையில், கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சின்ன ஏரியை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    இதே போல கவீஸ்வரர் ஆலய குளம், பெரிய ஏரி, உட்பட ஐந்து நீர்நிலைகளை சுத்தப்ப டுத்தி, 300 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்டோர் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். கிருஷ்ணகிரி நகராட்சி பகுதி யில், 1,500 மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் (பொ) சரவணன், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரகுமார், கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் முகமது ஆசிப், தேன்மொழி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×