என் மலர்
நீங்கள் தேடியது "பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம்"
- பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் 118 -வது பேரவை கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் 118 -வது பேரவை கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது. வங்கி ஆரம்பித்து 118 ஆண்டுகளில் முதல் முறையாக 1 கோடியே 30 லட்சத்திற்கு மேல் லாபம் இந்த ஆண்டு வங்கி ஈட்டி உள்ளது. மேலும் 22 ஆண்டுகளுக்கு பிறகு 11 சதவீதம் டிவிடெண்ட் வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி வங்கி தலைவர் வி. பாலாஜிக்கு சிறந்த தலைவருக்கான விருது வழங்கப்பட்டது.
கூட்டத்தில் வங்கியின் துணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சாய்குமாரி, வங்கியின் பொது மேலாளர் ஹரி கிருஷ்ணன், துணைத் தலைவர் கணேசன், இயக்குனர்கள் சித்தாரா, லதா, ரவி, கருணாகரன், வசீகரன், மாமல்லன், தமின்அன்சாரி, நரேந்திரன், பிரேமாவதி, ரகுராமன், சுரேஷ் மற்றும் வங்கிப் பணியாளர்கள், வாடிக்கை யாளர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.






