என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரெயில் பாதை"

    • 70 ஆண்டு கனவான நீண்டநாள் கோரிக்கையான ரெயில்பாதை அமைக்க முதல் கட்டப்பணிக்கு டி. பி. ஆர்-காக மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு.
    • பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    கிருஷ்ணகிரி

    சோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் வரை ரயில் இயக்க வேண்டும் என மாவட்ட மக்களின் கோரிக்கையாக நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

    மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் மத்தியநிதி அமைச்சகத்தினை அனுகி திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி ஒதிக்கீடு பெற்று தந்த கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமாருக்கு நன்றி தெரிவித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி ரவுண்டானா, ராயக்கோட்டை மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி நகர மக்களின் 70 ஆண்டு கனவான நீண்டநாள் கோரிக்கையான ரெயில்பாதை அமைக்க முதல் கட்டப்பணிக்கு டி. பி. ஆர்-காக மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்று தந்த, சோனியாகாந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆசியுடன், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர்.டாக்டர் செல்லக்குமாருக்கு நன்றி தெரிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக்கொண்டாடினர்.

    அப்போது முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, எஸ் நாராயணமூர்த்தி எஸ்.சி எஸ்டி பிரிவு பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகம், நகர தலைவர் லலித் ஆண்டனி, சேவாதள மாவட்ட முன்னாள் தலைவர் நாகராஜன், வட்டாரத் தலைவர்கள், ராமமூர்த்தி, சித்திக், நாகராஜன், முன்னாள் நகர தலைவர் முபாரக், செய்தி தொடர்பாளர் கமலக்கண்ணன் மாவட்ட செயலாளர் ஹரி, தொழிற்சங்க தலைவர் மைக்கேல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிலால், முனீர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ×