என் மலர்
நீங்கள் தேடியது "குவிந்துள்ள குப்பைகள்"
- துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் தினமும் சேரும் குப்பைகள் மகளிர் குழு மற்றும் துப்புரவு, தூய்மைக் காவலர்கள் வீடு வீடாக சென்று நடமாடும் குப்பை வண்டிகளில் பெற்று, திருவண்ணாமல செல்லும் மெயின்ரோடு பகுதியில் உள்ள வளமீட்பு பூங்காவில் சேர்க்கின்றனர். இங்குள்ள பணியாளர்கள் மக்கும் குப்பைகளை மண்புழு உரமாக மாற்றியும், மக்காத குப்பைகளை மலைபோல் சேர்த்து வருகின்றனர்.
இந்த வளமீட்பு பூங்கா எதிரே தனியார் பள்ளி உள்ளது. இங்குள்ள குப்பைகள் மூலம் துர்நாற்றம், கொசுத்தொல்லையால் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இங்கு சேர்ந்த குப்பைகளை மாற்றம் செய்ய வேறு இடம் கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பைகளை சேர்க்க மட்டும் தான் பணி நடக்கிறது. சேரும் குப்பைகளை உரிய முறையில் அகற்றி துர்நாற்றம் வீசாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.






