என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருகி வரும் நாய்கள் கூட்டத்தால் பொதுமக்கள் அச்சம்"

    • நாய்கள் சாலையின் குறுக்கே ஒடுவதாலும் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
    • இரவு நேரங்களில் வெளியில் செல்வதை மக்கள் குறைத்து கொண்டு வருவதாகவும் குற்றசாட்டு கூறுகின்றனர்.

    ,சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை தெரு, கீழ்தெரு. கே. கே, நகர்,மூஸ்லிம் தெரு, வி.ஐ.பி, நகர், மில்லத் நகர், ஒசூர்பேரிகை சாலை, கமலா காலனி, அண்ணா நகர், வாணியர் தெரு, காமராஜர் காலணி, ஒசூர் கிருஷ்ணகிரிசாலை, சூளகிரி உத்தனப்பள்ளி சாலை, டி.கே.நகர் அனைத்து தெரு மற்றும் முக்கிய சாலைகளில் நாய்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    பொதுவாக சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தொழில் சாலை மற்றும் பல்வேறு வேலைகள் நிமித்தமாக 100 மேற்ப்பட்ட கிராம மக்கள் சூளகிரி வந்து தான் செல்ல வேண்டும்.

    இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரையிலும் நாய்கள் ஆதிக்கத்தால் இரவு, அதிகாலை தொழிற்சாலை செல்லவோ தொழிற்சாலையில் இருந்து வரவோ நாய்கள் துரத்துவதும், நாய்கள் சாலையின் குறுக்கே ஒடுவதாலும் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

    இதனால் இரவு நேரங்களில்வெளியில் செல்வதை மக்கள் குறைத்து கொண்டு வருவதாகவும் குற்றசாட்டு கூறுகின்றனர். இந்த நாய்களை பிடித்து கட்டுப்படுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.

    ×