என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்கரத்தில் சேலை சிக்கி பெண் சாவு"

    • சக்கரத்தில் சேலை சிக்கியதால் பரிதாபம்
    • மகன் கண் முன்னே பரிதாபம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள போகலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.இவருடைய மனைவி விஜயா (வயது 55) மகன் முரளி (28) நேற்று வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரிக்கு பைக்கில் புறப்பட்டு வந்தனர். விஜயா பின்னால் அமர்ந்திருந்தார்.

    விரிஞ்சிபுரம் அடுத்த அண்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது விஜயாவின் சேலை எதிர்பாராத விதமாக பைக்கின் பின்பக்க சக்கரத்திற்குள் சிக்கியது.

    இதனால் பைக் தாறுமாறாக ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் விஜயாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். முரளி படுகாயம் அடைந்தார்.தனது கண் முன்னே தாய் இறந்ததைக் கண்டு அவர் அழுது துடித்தார்.

    இது குறித்த தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முரளியை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விஜயாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வரும் பெண்கள் விழிப்புணர்வுடன் அமர வேண்டும்.புடவை மற்றும் சுடிதார் ஆகியவை பின்பக்க டயரில் சிக்கி விடாமல் பார்த்துக் கொண்டால் மட்டுமே விபத்தை தவிர்க்க முடியும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×