என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது."
- நந்திபகவானுக்கு தீபாராதனை நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் நந்தி வாகனத்தில் உட்பிரகார உலா சிவகான பேரிகை முழங்க நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மேலும் நந்தி வாகனத்தில் சாமி உட்பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






