என் மலர்
நீங்கள் தேடியது "திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்"
- திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜா பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரி (23). இவர் நேற்று அவரது உறவினர் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது லோகேஸ்வரி திடீரென மயக்கம் அடைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த லோகேஸ்வரி உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






