என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்துகள் சேவை"

    • ரூ.100-க்கு மேல் வாங்கப்படும் மருந்துகளை வீட்டிற்கு சென்று டெலிவரி
    • கார்த்திகேயன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் ஒரு அங்கமான ஸ்ரீ சுகி பார்மாவில் மேலும் ஒரு சேவையாக மக்களை தேடி மருந்துகள் எனும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.100 மற்றும் அதற்கு மேல் வாங்கப்படும் மருந்துகளை ஆர்டர் செய்தவுடன் வீட்டிற்கு சென்று டெலிவரி செய்யப்படுகிறது.

    தேவைப்படும் மருந்துகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை தொலைபேசியிலோ அல்லது மருந்து சீட்டை வாட்ஸ் அப் செயலி மூலமாக 95001 11961 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் 2 மணி நேரத்திற்குள் மருந்துகள் டோர் டெலிவரி செய்யப்படும்.

    மேலும் ஆர்டர் செய்யும் அழகு சாதன பொருட்களுக்கு 5 சதவீதம் மற்றும் மருந்துகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை கார்த்திகேயன் எம் எல் ஏ ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவ கல்வி நிறுவனங்களின் இயக்குனர் பேராசிரியர் என் பாலாஜி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த சேவை வேலூர், ஆரணி, குடியாத்தம் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×