என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புக்குளம் ஏரி"

    • தியாகதுருகத்தில் கழிவு நீர் ஏரியாக புக்குளம் ஏரி மாறியது.
    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பேரூராட் சிக்கு உட்பட்ட புக்குளம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புக்குளத்தில் சுமார் 250 -ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தியாகதுரு கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தப்படும் கழிவுநீர் பிரதான கால்வாய் மூலம் புக்குளம் பெரிய ஏரியை சென்றடைகிறது. இதனால் புக்குளம் பெரிய ஏரி கழிவுநீர்கள் நிரம்பி கழிவு நீர் ஏரியாக மாறி உள்ளது. இவ்வாறு ஏரியில் கழிவு நீர் தேங்கியதால் புக்குளத்தில் உள்ள தக்க கிணற்றில் நீர் ஊற்றுகள் மூலம் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    இந்தநிலையில் புக்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்ட மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாயும், மாலை நேரங்களில் தக்க கிணற்றிலிருந்து அத்தியாவசிய தேவைக்கான வழங்கப்படும் நீர் ஆகியவை ஒரே குழாய் லைனில் வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிலருக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சுகாதாரத் துறையினர் முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர். மேலும் தக்க கிணற்றில் இருந்து நீர் மாதிரி பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. புக்குளம் பகுதியில் உள்ள கால்நடைகள் பெரிய ஏரியில் உள்ள கழிவு நீரை குடிப்பதால் கால்நடைகளுக்கு வாய் மற்றும் மடிப்பகுதியில் புற்றுநோய் ஏற்படுவதாகவும், கோமாரி நோய் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றன.

    மேலும் புக்குளத்தில் உள்ள சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத அவல நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கழிவு நீர் ஏரியில் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தியாகதுருகம் பகுதியில் இவ்வாறு ஏரி மற்றும் குளம் பகுதியில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், எனவே பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் நலனைகருத்தில் கொண்டு தியாகதுருகம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

    ×