என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்குண்டம்"

    • விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் அலகு குத்தி கொண்டு பாதயாத்திரையாக கோவிலை வந்தடைந்தனர்.
    • தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தியதை தொடர்ந்து அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை வள்ளலார்கோயில் ஸ்ரீவதான்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தை சேர்ந்த ஆனதாண்டவபுரம் ரோட்டில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயில் 31-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.

    விழாவில் காவேரி ஆறு வடக்கு கரையில் எழுந்தருளி அம்பாள் மட்டும் கரகமும் விரதமிருந்த பக்தர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் அலகு குத்தி கொண்டு பாதயாத்திரையாக கோவில் வந்தடைந்தனர். கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா காட்சியும் நடைபெற்றது.

    இதில் குலதெய்வ குடும்ப த்தார் பாண்டுரங்கன், நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.எஸ்.குமார், நகரமன்ற உறுப்பினர்கள் கல்யாணி ரகு, ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மோகன், விழாக்குழுவினர் மற்றும் ஆலய அர்ச்சகர் சோமசுந்தர சிவாச்சாரியார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×