என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ்காரரை தாக்கிய லாரி டிரைவர் அதிரடி கைது"
- சம்பத்குமாருடன் தகராறு செய்து அவரை தாக்கினார்.
- போலீசார் மோகனை கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தணிகை நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது35). இவர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2-ந் தேதி மோட்டார்சைக்கிளில் ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் காமராஜ் காலனி பக்கமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி சம்பத்குமார் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அந்த நேரம் லாரியை ஓட்டி வந்த ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்த மோகன் (24), போலீஸ்காரர் சம்பத்குமாருடன் தகராறு செய்து அவரை தாக்கினார்.
இது குறித்து சம்பத்குமார் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மோகனை கைது செய்தனர்.






