என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் ஆனது ஏன்?-"

    • கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி டீன் சஸ்பெண்டானார்.
    • புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

     கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த ஜனவரி மாதம் செயல்பட தொடங்கியது. இந்த கல்லூரியின் முதல்வராக டாக்டர்அசோகன் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சஸ்பெண்டு

    நேற்று முன்தினம் அவர் பணி ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் அவர் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஓய்வு பெறும் நாளில் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:-

    கோவை அரசு மருத்துவ கல்லூரியில் அசோகன் கடந்த 2020-ம் ஆண்டு முதல்வராக இருந்தார். அப்போது மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

    விசாரணை

    இதனால் இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்த விசாரணை உத்தரவின் காரணமாகவே அசோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு மருத்துவத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    ஓய்வு பெறும் நாளில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ கல்லூரி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×