என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு துணைத் தேர்வில் வெற்றிபெற கலெக்டர் அறிவுரை"

    • 10, 12-ம் வகுப்புகளுக்கு துணை தேர்வு நடக்கிறது.
    • வெற்றிபெற கலெக்டர் அறிவுரை

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தங்களது திறமைகளை பயன்படுத்தி சிறப்பு துணைத் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுரை வழங்கியுள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லையே என்று விரக்தி அடையாமல், அடுத்த கட்ட தேர்வில் வெற்றி பெற்று, தங்களின் தனித்திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 10, 11 மற்றும் 12-ம் வகுபபு தேர்வு எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலம் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பை பயன்படுத்தி இம்மாதம் (ஜூலை) நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வில் வெற்றி பெற்று, இவ்வாண்டே உயர் கல்வி பயிலலாம். சிறப்பு துணைத் தேர்வு முடியும் வரை செல்போன் மற்றும் இதர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தவிர்த்து, சிற்பபு தேர்வில் கவனம் செலுத்தி மாணவர்கள் வெற்றிபெற வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்படின், தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று, தங்களது சந்தேகத்தை ஆசிரி யர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்து ்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×