என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை"

    • பிளஸ்-2 தேர்வில் 88.28 சதவீதம் தேர்ச்சி.
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை, :

    10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 வகுப்பில் 93.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    பிளஸ் 2-வில் 88.28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி பெற்று உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தொிவித்து கொள்கிறேன்.

    தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூலை மாதத்தில் உடனடியாக பொதுத் தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட உள்ளது. நீங்கள் எந்தவித அச்சமும், பயமும் இன்றி உடனடியாக தேர்ச்சி பெற்று நடப்பு கல்வியாண்டிலேயே உயர்கல்வியினை தொடரலாம்.

    தவறான முடிவிற்கு ஏதும் செல்ல வேண்டாம். உங்களுக்கு தேவையற்ற குழப்பமோ, பயம் ஏதும் இருந்தாலோ அல்லது உங்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை ஏதும் தேவைப்பட்டாலோ மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

    குழந்தைகள் உதவி மையம்- 1098 மற்றும் 14417, மனநல ஆலோசகர் நாராயணன் - 9842981128, முதன்மை கல்வி அலுவலகம் - 9486437686, மாவட்ட கல்வி அலுவலகம் - 9865179717 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    ×