என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைவரும் கட்டாயம் தினமும் யோகா பயிற்சி செய்ய வேண்டும்"

    • சர்வதேச யோகா தினத்தையொட்டி பயிற்சி
    • 3346 பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    சர்வதேச யோகா தினத்தையொட்டி என்சிசி 10-வது பட்டாலியனுக்கு உட்பட்ட காட்பாடி டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , ஊரீஸ் கல்லூரி, முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி , குடியாத்தம் திருமகள் ஆலை கல்லூரி, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி, ஆம்பூர் மஸ்ருல் உலூம் கல்லூரி, ஏலகிரி டான்பாஸ்கோ கல்லூரி உள்பட பல மையங்களில் சேர்த்து மொத்தம் 3346 என்சிசி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் ஷர்மா தலைமை தாங்கி தொடக்கி வைத்து பேசியதாவது:-

    அனைவரும் கட்டாயம் தினமும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் . யோகா பயிற்சிகள் மேற்கொண்டால் உடல் மற்றும் மனம் உறுதியுடன் இருப்பது மட்டுமல்லாமல், எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றாமல் இருக்க உதவுகிறது. மேலும் யோகா பயிற்சிகள் அனைத்து நாட்டவரும் மேற்கொள்கின்றனர். மன அழுத்தம் நீங்கி நீண்ட ஆயுள் பெற யோகா பயிற்சிகளை எல்லோரும் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினார். என்சிசி 10-வது பட்டாலியனின் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே. சுந்தரம், காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்சிசி முதன்மை அலுவலர் க.ராஜா மற்றும் சுபேதார் மேஜர் சத்பீர்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்சிசி யோகா பயிற்சிகளை வேலூர் உலக சமுதாய சேரை சங்கத்தைச் சேர்ந்த யோகா பேராசிரியர்கள் ஆர்.அருள்ஜோதி மற்றும் டி.சுந்தர பாண்டியன் ஆகியோர் மேற்கொண்டனர்.

    சர்வதேச யோகா தினத்தில் கழுத்து, தோள்பட்டை, தண்டு, முழங்கால் நீட்சி பயிற்சிகள், தாடாசனம், வ்ருஷாசனம், அர்த்த சக்ராசனம், திரிகோணாசனம், தண்டாசனம், பத்ராசனம், வஜ்ராசனம், அர்த்த உஷ்ட்ராசனம், சஷங்காசனம், வக்ராசனம், மக்ராசனம், சலபாசனம், சேதுபந்தாசனம், பவனமுக்தாசனம், சவாசனம், கபாலபத்தி, பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை என்சிசி மாணவர்கள் செய்தனர். சர்வதேச யோகா தினத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், என்சிசி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். 10 வது பட்டாலியனின் ராணுவ அவில்தார்கள் ராமாராவ், துரைமுருகன், ரமேஷ், வீரமணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    ×